கதீஜா கிண்டகார்டன் முன் பள்ளியின் வருடாந்த கலை விழா



பாறுக் ஷிஹான்-
தீஜா கிண்டகார்டன் முன் பள்ளியின் வருடாந்த கலை விழாவும் பரிசளிப்பு விழாவும் பிரபல அறிவிப்பாளரும் முன்பள்ளி நிறுவுனருமான அஹமட்லெப்பை அன்ஸார் கடந்த ஞாயிற்றுக்கிழமை(26) தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக்கும் விஷேட விருந்தினராக மல்ஹறுஸ் ஸம்ஸ் தேசிய பாடசாலையின் அதிபர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.ஐ மதனி , சமூக சேவகர் எம்.ஐ.எம். ஜிப்ரி (LLB) உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பாடசாலையில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களை பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர் ஆகியோர் வழங்கினர்.
மேலும் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.இந் நிகழ்வில் மாணவர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :