மூதூர் சுகாதார வைத்தியதிகாரியாக டாக்டர் எம்.பி.எம்.ஹில்மி முகையதீன் பாவா (26) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
மூதூர் சுகாதார வைத்திய அதிகாரியாக கடமை புரிந்த
டாக்டர் என்.எம்.எம்.ஹஸ்ஸாலியின் வருடாந்த இடமாற்றத்தை தொடர்ந்து அவரின் இடத்திற்கு, கிண்ணியா தள வைத்தியசாலையில் இரத்த வங்கி வைத்தியதிகாரியாக கடமை புரிந்த எம்.பி.எம்.ஹில்மி முகைதீன் பாவா நியமிக்கப் பட்டுள்ளார்.
இவர் திருகோணமலை மாவட்டத்தில் இலவச நடமாடும் வைத்திய சேவையைச் செய்தவரும்,சமூக சேவையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவருமாவார்.
முன்னாள் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை இராஜாங்க அமைச்சருமான அப்துல்லா மஹ்ரூபின் மூத்த மருமகனும் ,மர்ஹும் முகையதீன் பாவா ஆசிரியரின் சிரேஷ்ட புதல்வர் என்பது குறிப்பிடத் தக்கது.
0 comments :
Post a Comment