கொவிட் தொற்று காரணமாக கிளினிக் நோயாளர்களுக்கு அஞ்சல் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களால் விநியோகிக்கப்பட்டு வந்த மருந்து வகைகள் அடங்கிய பொதிகள், (30) சனிக்கிழமை முதல் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக, பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித்த ரணசிங்க அறிவித்துள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தனவின் அறிவுறுத்தலுக்கமைய, ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதிக்குப் பின்னர் மருந்துப் பொருட்கள் அடங்கிய பொதிகள் விநியோகத்தினை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, சகல பிரதி அஞ்சல் மா அதிபர்கள், அஞ்சல் அத்தியட்சகர்கள் உட்பட அஞ்சல் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கொவிட் தாக்கம் குறைவடைந்து, மக்கள் சாதாரண நிலைக்குத் திரும்பியுள்ளதாலேயே, அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்களால் விநியோகிக்கப்பட்டு வந்த மருந்துப் பொதிகள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments :
Post a Comment