கல்முனையில் சமுர்த்தி உதவி பெறும் மற்றும் சமுர்த்தி பெற தகுதியான குடும்பங் களுக்கு தென்னங் கன்றுகள் மற்றும் வீட்டுத் தோட்ட மரக்கறி விதைப்பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு



எம். என். எம். அப்ராஸ்-
த்து இலட்சம் வீட்டுத்தோட்ட மனைப்பொருளாதாரத்தினை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகிறது

இதனடிப்படயில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் கல்முனை பிரதேச செயலக பிரிவில் உள்ளகல்முனைக்குடி சமூர்த்தி வங்கி வலய பிரிவில் தெரிவு செய்யப் பட்ட சமூர்த்தி உதவி பெறும் மற்றும் சமுர்த்தி உதவி பெற தகுதியான குடும்பங் களுக்கு வீட்டுத்தோட்ட விதைப்பொதிகள் மற்றும் தென்னங் கன்றுகள் வழங்கும் ஆரம்ப நிகல்வு கல்முனைக்குடி சமூர்த்தி வங்கி வலய முகாமையாளர் மோசஸ் புவிராஜ் தலைமையில் இன்று (09) கல்முனைக்குடி 4ஆம் பிரிவு கிராம சேவகர் பிரிவில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் அதிதிகளாக கல்முனை பிரதேச செயலாளர்
ஜே . லியாக்கத் அலி ,கல்முனை பிரதேச செயலக சமூர்த்தி தலைமை பீட சிரேஷ்டமுகாமையாளர் ஏ. ஆர். எம். சாலிஹ் ,கருத்திட்ட முகாமையாளர் ஏ.எம்.எஸ்.நயீமா, சமுர்த்தி மகாசங்க முகாமையாளர் எஸ்.எஸ்.பரீரா, வலய உதவி முகாமையாளர் எஸ். எல். அஸீஸ் சமூர்த்தி உத்தி யோகத்தர்களான எம்.ஐ.எம். சித்தீக், எஸ்.எச். சமீம் மற்றும் பிரிவு மட்ட தலைவர்கள் என கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :