பிறைந்துறைச்சேனையில் போதை மாத்திரை வியாபாரி கைது



எஸ்.எம்.எதம்.முர்ஷித்-
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பிறைந்துறைசேனை புகையிரத வீதியில் சந்தேக நபரின் வீட்டில் வைத்து போதை மாத்திரை வியாபாரி ஒருவர் இன்று (05.08.2021) கைது செய்யப்பட்டுள்ளார்.

போதை வியாபாரியான சந்தேக நபரை பல நாட்களாக தேடிவந்த போதிலும் இன்று கைது செய்யப்படும் போது அவரிடமிருந்து 48 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய வாழைச்சேனைப் பொலிஸ் நிலைய குற்றப்த்தடுப்புப்பிரிவுப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினரோடு இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழைச்சேனைப் பொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் இவருடன் தொடர்புடைய வேறு நபர்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர்கள் தொடர்பாகவும் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :