வில்லுக்குளத்து நிலத்தில் அத்துமீறி உழுத உழவு இயந்திரங்கள் மடக்கிப் பிடிப்பு!



மாளிகைக்காடு நிருபர்-
றக்காமம் வில்லு குள கிழக்கு கரைக்கு சொந்தமான நிலப் பகுதிகள் மிகவும் சூட்சுமமான முறையில் அடாத்தாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. குளத்தின் உயர்மட்ட எல்லைப் பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளதோடு கோடை காலத்தில் குளத்தில் நீர் வற்றும்போது குளத்தின் நீர் தேங்கும் பகுதிகளுக்குள் உயரமான வரம்புகள் கட்டப்பட்டு குளத்தின் பகுதிகள் சுவீகரிக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் பொது மக்கள் இறக்காமம் பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து பிரதேச சபையினால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தவகையில் குறிப்பிட்ட எல்லைப் பகுதிகளுக்குள் எல்லாவிதமான விவசாய நடவடிக்கைகளுக்கும் பிரதேச சபையின் அனுமதி இன்றி செய்யக்கூடாது என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த கட்டளையையும் மீறி செயற்பட்ட உழுவு இயந்திரங்கள் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :