சவால்மிகுந்த ஒரு காலகட்டத்தில் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்குடன் டிஜிட்டல் முறையான கற்றல் செயற்பாடுகள் ஊடாக மாணவ சமூகத்தின் கல்வி நடவடிக்கைளுக்கு உதவும் வன்னி ஹோப் அவுஸ்ரேலியா மற்றும் திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தின் முயற்சிகள் வரவேற்கத்தக்கதும் பாராட்டவேண்டிய ஒன்றாகவும் உள்ளது என கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் ஏ. சி. எம்.முஸ்இல் தெரிவித்தாா்.
வன்னி ஹோப் அவுஸ்ரேலியா நிறுவனத்தின் நிதி அனுசரணையில் மக்கள் சேவை மன்றத்தினால் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூன்று பின்தங்கிய பாடசாலைகளுக்கு 15 கணணித் தொகுதிகள் வழங்கி வைக்கும் வைபவம் மக்கள் சேவை மன்றத்தின் தலைவர் எம். ரீ. எம் பாரிஸ் தலமையில் மட்கோ அல்-மின்ஹாஜ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே திட்டமிடல் பணிப்பாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கோவிட் அசாதாரண சூழல் காரணமாக மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கோவிட் பரவல் காரணமாக பாடசாலைகள் பல தடவைகள் மூடப்பட்டன.
கற்றல் செயற்பாடுகளை நிகழ்நிலை மூலம் கற்பிப்பதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்து வந்தாலும் டிஜிட்டல் கல்வி சாதண வசதிகள் எல்லாப் பாடசாலைகளிலும் மாணவர்களிடமும் இல்லாதுள்ளது.
இதனால் இந்த முறை மூலம் கற்றல்
செயற்பாடுகள் எதிர்பார்த இலக்கை அடைய முடியாதுள்ளது. எதிர்காலத்தில் டிஜிட்டல் கல்வி முறையுடான கற்பித்தல் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தவுதற்கான கல்வி மறுசீரமைப்புகளை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன் அவசியத்தினை உணர்ந்து வன்னி ஹோப் நிறுவனம் பின்தங்கிய பாடசாலைகளுக்கு கணனி வசதிகளை வழங்கி வருவதானது மாணவர்களின் டிஜிட்டல் முறையான கல்வி செயற்பாடுகளுக்கு பாரிய நன்மையளிக்கும். அத்தோடு கஸ்ட, அதிகஸ்ட பாடசாலைகளில் நவீன கல்வி முறை ஊடான கற்றல் வெளியீட்டுக்கு வன்னிய ஹோப் அவுஸ்ரேலியா நிறுவனத்தின் உதவிகள் பாரிய பங்களிப்பு செய்யும் என்பதிவல எவ்வித ஐயமுமில்லை.
கிராமம்புற பாடசாலைளின் உண்மை நிலைகளை அறிந்து பல்வேறு தேவைகளை நிறைவேற்றி ஏழை மாணவர்களின் கல்விக்காக அர்பணித்துவரும் வன்னி ஹோப் அவுஸ்ரேலியா மற்றும் திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினை நான் மனதார பாராட்டுகின்றேன் அவர்களின் சேவை எமது மாவட்டத்திற்கு மாத்திரமல்ல முழு நாட்டுக்கும் அவசியமானது என அவர் தனது உரையில் குறிப்பிட்டாா்.
நவீன கற்றல் செயற்பாடுகள் ஊடாக தங்களுடைய கற்றல் நடவடிக்கைகளை தங்குதடையின்றி மேற்கொள்ளுவதற்கான வன்னி ஹோப் அவுஸ்ரேலிய நிறுவனத்தின் கணனித் தொகுதிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் கிண்ணியா கல்வி வலையத்திற்குட்பட்ட ஆலேங்கேணி சித்திவிநாயகர் மகா வித்தியாலயத்திற்கு ஐந்து கணனித் தொகுதிகளும், திருகோணமலை கல்வி வலையத்திற்குட்பட்ட குளக்கோட்டன் தமிழ் வித்தியாலயத்திற்கு ஐந்து கணனித் தொகுதிகளும் மட்கோ அல்-மின்ஹாஜ் மகா வித்தியாலயத்திற்கு ஐந்து கணனித் தொகுதிகளும் வழங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment