பாடசாலை ஆரம்பிப்பதையொட்டி கட்டாயக்கல்விக்குழுக்களான செயலமர்வு!



காரை.சகா-
கொரோனா தாக்கம் காணரமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீளத்திறக்கின்றபோது, மாணவர்களை பாடசாலைக்குவரவழைத்தலில் பாடசாலைக்கல்விக்குழு மற்றும் கட்டாயக்கல்விக்குழுக்களுக்கான பங்களிப்பு தொடர்பாக கருத்தரங்குகள் நடைபெற்றுவருகின்றன.

கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் ஏற்பாட்டில், அந்தந்த வலயக்கல்விப்பணிமனைகள் இக்கருத்தரங்குகளை சுகாதார நடைமுறைகளுக்கிணங்க நடாத்திவருகின்றன.

அந்தஅடிப்படையில்,சம்மாந்துறைவலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீமின் வழிகாட்டலுக்கமைவாக, முறைசாராக்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா இக்கருத்தரங்குகளை நடாத்திவருகிறார்.

சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனைக்குட்பட்ட நாவிதன்வெளி, சம்மாந்துறை மற்றும் இறக்காமக் கோட்டங்களிலுள்ள பாடசாலைகளின் கட்டாயக்கல்விக்குழுக்கான செயமலர்வுகள் நாவிதன்வnளி கணேசா வித்தியாலயததிலும் ,சம்மாந்தறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரியிலும் கடந்த இருதினங்களில் நடைபெற்றன.

ஆசிரியஆலோசகர்களான எ.அஹமட், எம்.ஜ.அகமட், எஸ்.பிரகதிஸ்வரன் ஆகியோரின் ஒத்துழைப்புடன் முன்னாள் முறைசாராக்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் எம்.எ.றசூல் வளவாளராகக்கலந்துகொண்டு கருத்தரங்கு நடைபெற்றன.

அந்தந்த கோட்ட பாடசாலைகளின் அதிபர்கள் பெற்றோர்கள் இக்கருத்தரங்குகளில் பங்குபற்றிவருகின்றனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :