2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் திருமலை நகர் சமூகத்திடமிருந்து ஆடைகளும் புத்தகங்களும் பெருவாரியாக சேகரிக்கப்பட்டன. வறுமையினால் வாடும் பாட்டாளிபுரம் மக்களுக்காக பலரும் மனமுவந்து நன்கொடைகளை வழங்கியிருந்தனர்
2021 ஆம் ஆண்டு ஜுலை 25ஆம் திகதி அன்று ரோட்ராக்ட் கழகத்தினர் பாட்டாளிபுரம் கிராமத்திற்கு சென்று சேகரித்த பொருட்களை கையளித்தனர் இத்திட்டத்தின் மூலம் 35க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயனடைந்தனர்.
திருகோணமலை ரோட்டரி கழக செயலாளர் திரு பிரபாகரன், ரோட்டரி கழக அங்கத்தவர் திரு. ரகுராம், ரோட்ராக்ட் கழக தலைவர் திரு. ஜீவ குஹகரன் ஆகியோர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.
திருகோணமலை ரோட்ராக்ட் கழகத்தினரால் முன்னரும் மனிதம் நிகழ்ச்சித்திட்டம் மூலம் திருமலை நகரில் உள்ள வறியவர்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்
0 comments :
Post a Comment