காரைதீவைச்சேர்ந்த ஓய்வுநிலை அதிபர் வே.கிருஸ்ணபிள்ளை நேற்று(19) தனது 81ஆவது வயதில் காலமானார்.
இவர் கல்முனை கார்மேல் பற்றிமா தேசியகல்லூரியில் பிரதிஅதிபராக
3தசாப்தகாலத்திற்கும் மேலாக அர்hப்பணிப்பான சேவையாற்றியவராவார்.
காரைதீவு ஓய்வூதியர் சங்கத்தலைவராக கண்ணகை அம்மனாலய நிருவாகசபை உறுப்பினராக விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்ற செயற்குழு உறுப்பினராக ப.நோ.கூ.இயக்குனர்சபை உறுப்பினராக பல்வேறு சமுகசேவை அமைப்புகளில் தனது பொதுச்சேவையை வழங்கியவர்.
அன்னாரின் தகனக்கிரியைகள் (20)வியாழக்கிழமை காலை 9மணியளவில் காரைதீவு இந்துமயானத்தில் நடைபெறுமென குடும்பத்தினர் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment