கட்சியின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீன் அவர்களின் அநியாயகக் கைது சம்மந்தமாக விரிவாக பேசப்பட்டது. பங்கேற்ற சகல உயர்பீட உறுப்பினர்களும் தலைவரின் ஜனநாயக விரோத கைதை கண்டித்து ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஏகோபித்த கருத்துடன் பல்வேறு ஆலோசனைகளையும் தலைவரின் விடுதலையை துரிதப்படுத்த பல கருத்துகளையும் முன்வைத்தனர்.
தலைவரின் ஜனநாயக விரோத கைதுக்கு எதிராக முன்னெடுத்த கண்டன ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்த அமைப்பாளர்கள் ,ஆதரவாளர்கள், போராளிகளுக்கு தவிசாளரினால் நன்றி தெரிவிக்கப்பட்டது.
கட்சியின் நிர்வாக செயற்பாடுகளுக்கும் ஆவணங்களில் உத்தியோகபூர்வ ஒப்பமிடுவதற்கும் கட்சியை வழிநடத்துவதற்கும் தற்காலிகமாக (தலைவர் விடுதலையாகும் வரைக்கும்) கட்சியின் தற்காலிக தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணியும் கட்சியின் சிரேஷ்ட பிரதி தலைவருமான கெளரவ சஹீட் அவர்களை நியமிப்பதாக உயர்பீட அதிகார சபை ஏகமனதாகத் தீர்மானித்து.
இது தொடர்பாக சட்டபூர்வ ஒரு நியமனத்தையே அரசியல் உயர்பீடம் மேற்கொண்டுள்ளது. எனவே பொறுமை காத்து கட்சியினால் தலைவரின் விடுதலைக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்
M I முத்து முஹம்மட்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித் தவிசாளர்
0 comments :
Post a Comment