இலங்கையில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையில் சிக்கி இதுவரை 606 பேர் உயிரிழந்திருக்கிற்னர்.
சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நேற்று வெளியிட்ட 32 பேரின் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையுடன் சேர்த்து இந்தப் புதிய எண்ணிக்கை வெளியாகியிருக்கின்றது.
கொரோனா முதலாவது அலையில் 13 பேர் வரை உயிரிழந்தனர். இரண்டாவது அலை மற்றும் மூன்றாவது அலையில் இதுவரை 1210 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் 567 பேர் 70 வயதைக் கடந்தவர்கள். 61 தொடக்கம் 70 வயதினிடையே 321 பேரும், 51 தொடக்கம் 60 வயதிடையே 171 பேரும் உள்ளனர்.
அத்துடன் 41 முதல் 50 வயதிடையே 87 பேரும், 31 முதல் 40 வயதிடையே 34 பேரும் இதுவரை உயிரிழந்திருக்கின்றனர்.
இதேவேளை, 10 வயது முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட 15 பேரும், 9 வயதுக்கு குறைவான இருவரும் கொரோனா தொற்றில் இதுவரை உயிரிழந்தவர்களின் பட்டியலில் உள்ளனர்.
0 comments :
Post a Comment