கூட்டத்தின் முக்கிய நோக்கம் இதுதான் என்பது ஆரம்பத்திலிருந்தே தெளிவாகத் தெரிந்தது. மே தின கொண்டாட்டங்களின் போது அரசாங்கத்தின் உள் அதிர்வுகள் தெளிவாக சமூகமயமாக்கப்படும் என்பதைத் தடுப்பதற்கான சிறந்த வழி கோவிட்டின் மூன்றாவது அலைகளைக் காண்பித்து மே தின கொண்டாட்டங்களைத் தடுப்பதே.
மே தின கொண்டாட்டங்களின் போது முதன் முறையாக கொண்டாடும் ஐக்கிய மக்கள் சக்தி எவ்வாறு இதைக் கொண்டாடும் என்பது குறித்து அரசாங்கத்திற்கும் அரசாங்கத்துடன் ஒப்பந்த அரசியலில் ஈடுபட்டவர்களுக்கும் இது குறித்து கடுமையான அச்சங்கள் இருந்தன. அத்தகைய மே தின கொண்டாட்டத்தை கூட ஏற்பாடு செய்ய முடியாத அரசியல்வாதிகள்,அரசாங்கத்தின் இந்த முடிவின் பின்னணியில் உள்ளனர் என்பது இரகசியமல்ல.
கடந்த பண்டிகைக் காலங்களில் மக்களை ஒன்று சேற இடமளித்து,மக்களை சேர்த்து ஜனாதிபதியின் கிராமத்துடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் தடையின்றி ஒன்று கூட அனுமதித்த அரசாங்கம் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுவதைத் தடுப்பதன் மூலம் அதன் வீழ்ச்சியடைந்த மக்கள் சக்தியின் வெளிப்பாட்டை மூடிமறைக்க எடுக்கும் வெட்கமில்லாத முயற்சி. இந்த முடிவை கோவிட் தொற்றுநோயைப் பயன்படுத்தி தொழிலாளர் வர்க்கத்தை அவமதிப்பதாக நாங்கள் கண்டிக்கிறோம்.
மே தின கொண்டாட்டங்களுக்கு தேவையான சுகாதார வழிகாட்டுதல்களை வழங்கும் செயற்பாட்டையே அரசாங்கம் செய்திருக்க வேண்டும். இதைச் செய்வதை விட்டுவிட்டு மே தின கொண்டாட்டங்களை நிறுத்தியதால் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசாங்கமாகவே மேலும் அடையாளப்படுத்தப்படும் என்பதையும், அரசாங்கம் மீண்டும் மீண்டும் தோல்வியுற்றது என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.
ரஞ்சித் மத்தும பண்டார.
பொதுச் செயலாளர்,
ஐக்கிய மக்கள் சக்தி

0 comments :
Post a Comment