மன்னார் மாவட்டத்தில் மாந்தை வடக்கு எனும் புதிய பிரதேச செயலகப் பிரிவு உருவாக்கம்!

ஊடகப்பிரிவு-
ன்னார் மாவட்டத்தில் மாந்தை வடக்குக்கு எனும் புதிய பிரதேச செயலகப் பிரிவொன்றை அமைப்பது சம்பந்தமாக எடுக்கும் தீர்மானத்தின் முன்மொழிவை தேசிய பாதுகாப்பு உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சுக்கு அனுப்பி வைக்கும் நோக்கில் உயர்மட்ட கலந்துரையாடலொன்று இன்று (08) மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் பிரசன்னத்தோடு சிறப்பாக இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான குலசிங்கம் திலீபன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ, ஸ்ரான்லி டி மெல், பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பதவிநிலை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :