இலங்கையின் 73வது சுதந்திர தின விழா கல்முனை மாநகர சபையினால் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது



சர்ஜுன் லாபீர்-
லங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 73 வது சுதந்திர தின விழா கல்முனை மா நகர சபையின் முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம்.ரக்கீப் தலைமையில் இன்று(4) நடைபெற்றது.
இந் நிகழ்வில் சர்வமதத் தலைவர்களின் போதனைகளும், அனுஸ்டானங்களும் இடம்பெற்றதுடன் மூவீன மக்களின் பங்களிப்புடன் மிக விமர்சியாக நடைபெற்றது.

மேலும் இந் நிகழ்வில் எமது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்கள் மற்றும் ஏனையவர்காளுக்காக 2 நிமிட மெளன பிராத்தனையும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், முப்படைகளின் பிரதிநிதிகள், மாநகர சபை ஆணையாளர்,பிரதி ஆணையாளர், பொறியியலாளர், கணக்காளர், பிரதம வைத்திய அதிகாரி,மும் மதத் தலைவர்கள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள்,சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :