கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பஹ்ரைன் நாட்டின் தேசிய விமான சேவையான கல்ஃப் எயார், அதன் நேரடி சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
இதன்பிரகாரம், எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் வாராந்தம் இரண்டு விமானங்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக கல்ஃப் எயார் அறிவித்துள்ளது.
கல்ஃப் எயார், 1981 முதல் பஹ்ரைன் மற்றும் இலங்கைக்கு இடையே நேரடி விமான சேவைகளை முன்னெடுத்துள்ளது.
அபுதாபி, துபாய், குவைத், ரியாத், ஜித்தா, தம்மாம், மதீனா, மஸ்கட், கெய்ரோ, அம்மன், காசாபிளாங்கா, இலண்டன், பாரிஸ், பிராங்பேர்ட், ஏதென்ஸ், பேங்கொக், மணிலா, டாக்கா, அத்துடன் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள பல இடங்களுக்கு கல்ஃப் எயார் தனது சேவைகளை முன்னெடுத்துள்ளது.
2020 ஆம் ஆண்டில் ஒருபோதும் பறப்பதை நிறுத்தாத சில விமான நிறுவனங்களில் ஒன்றாக விளங்கிய கல்ஃப் எயார், அதன் வலையமைப்பு முழுவதும் உள்ள அரசாங்க அதிகாரிகளுடன் தொடர்ந்து நெருக்கமாக இணைந்து செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment