இலங்கையில் புதிய கைத்தொலைபேசியை வாங்கும் போது கவனிக்க வேண்டிய சட்டச்சிக்கல்கள்!



J.f.காமிலா பேகம்-
புதிய கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்யும் போது, குறித்த தொலைபேசி இலங்கையில் பதிவு செய்துக்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்கான முறைமையொன்றை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.

குறுந்தகவலொன்றின் ஊடாக குறித்த தொலைபேசி தொடர்பில் அறிந்துக்கொள்ள முடியும் என தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படாத தொலைபேசிகளை கடந்த ஒக்டோபர் மாதம் முதல் தொலைபேசி வலையமைப்புக்களுடன் இணைக்காதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்ததாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, கையடக்கத் தொலைபேசியிலுள்ள இமி இலக்கத்தை 1909 என்ற இலக்கத்திற்கு அனுப்புவதன் ஊடாக, அந்த தொலைபேசியின் பதிவு தொடர்பான தகவல்களை பயன்பாட்டாளருக்கு அறிந்துக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறுந்தகவல் அனுப்பும் விதம் :- IMEI<SPACE><15DIGIT IMEI>SEND SMS TO 1909
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :