கிழக்கு மாகாண கல்விச் செயற்பாட்டை மீளாய்வு செய்வதற்காக குழுவொன்று நியமிப்பு.



எப்.முபாரக்-
கிழக்கு மாகாண கல்விச் செயற்பாட்டை மீளாய்வு செய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதன் உறுப்பினர்களாக ஏ.சி. முஸ்ஸல் (கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளர்), ஆர்.சுதர்ஷன் (கிழக்கு மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் - கல்வியமைச்சு), யு.கே.செனிவிரட்ண (கிழக்கு மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் - கல்வியமைச்சு), ஏ.ஜி.முகம்மத் பஸால் (கிழக்கு மாகாண உதவிச் செயலாளர் -கல்வியமைச்சு) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வருடாந்தம் பல இலட்சம் ரூபாய் செலவு செய்கின்ற போதிலும் கிழக்கு மாகாண கல்வி அடைவு மட்டத்தில் பின் தங்கியுள்ளது.

இது தொடர்பாக ஆராய்ந்து முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரை செய்வதற்காக கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எம்.எல்.சி பெர்ணான்டோவினால் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :