வித்தகர் விருது" பெறுபவர்களுள் ஒருவராக எம். சி.எம் ஷெரீப் (BA,SLAS) தெரிவு.

எப்.முபாரக்-

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவில் விருது பெறுவதற்காக தெரிவான கலைஞர்கள் விபரம் வெளியாகியுள்ளது.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சு மற்றும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இணைந்து 2020 ம் ஆண்டுக்கான இலக்கிய விருது வழங்குவதற்காக 12 கலைஞர்களைத் தெரிவு செய்துள்ளது.

இவ்விருதான "வித்தகர் விருது" பெறுபவர்களுள் ஒருவராக மூதூரைச் சேர்ந்த முன்னாள் கிழக்கு மாகாண கூட்டுறவு உதவி ஆணையாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற, சிரேஷ்ட அரச நிருவாகத் துறை அதிகாரியும், பல்துறைசார்ந்த வரலாற்றுத் தகவல்களை சுவடுகளாக்கியவருமான எம். சி.எம் ஷெரீப் (BA,SLAS) தெரிவு செய்யப்பட்டுளளார்.

இவர் மூதூரை பிறப்பிடமாக கொண்டதுடன் மூதூர், ஏறாவூர், போன்ற இடங்களில் பிரதேச செயலாளராகவும் பணியாற்றியதுடன் இரண்டுமுறை மாகாண கூட்டுறவு உதவி ஆணையாளராகவும், கிழக்கு மாகாண சபை செயலகத்தின் செயலாளராகவும் பணியாற்றினார். அத்துடன் இவர் சில நூல்களையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :