வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் மேலும் 10 பேருக்கு தொற்று ; தொற்றாளர் 72 உயர்வு ; 600 பேர் சுயதனிமை



நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-
வட்டவளை ஆடைதொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி  இதுவரையிலும் 72 பேர் இனங்கானபட்டுள்ளனர் 600பேர் சுயதனிமை படுத்தல்...

வட்டவளை ஆடைதொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த மேலும் 10பேருக்கு கொரோனா தொற்று உருதி செய்யப்பட்டுள்ளதாக அம்பகமுவ பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்

03/01 .2021 இன்று வெளியான பி.சி.ஆர் அறிக்கையின் ஊடாக வட்டவளை தோட்டத்தில் 07 பேரும் வட்டவளை நகரபகுதியில் 03 பேருமாக 10 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிய செய்யப்பட்டுள்ளது.
குறித்த ஆடைத்தொழிற்சாலை தொடர்ந்தும் மூட்டப்பட்டுள்ளதுடன் ஆடைதொழிற்சாலை ஊழியர்கள் 72 பேருக்கு இதுவரையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களோடு தொடர்புகளை பேணிவந்த 600 பேர் வரையில் சுயதனிமை படுத்தப்பட்டுள்ளதாக அம்பகமுவ பொது சுகாதார அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை அதிக தொற்றாளர்கள் உறுதியான வட்டவளை மவுண்ஜின் தோட்டம் சுயதனிமைப்படுத்தப்பட்டு முடக்கபட்டுள்ளதோடு குறித்த தோட்டபகுதியில் இருந்து எவரும் வெளியில் செல்லவோ வெளியார்கள் உள் நுளைவதற்கே அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அம்பகமுவ பொது சுகாதார அதிகாரிகள்
மேலும் தெரிவித்தன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :