ஊரடங்கு வேளையிலே
+++++++
Mohamed Nizous
திறந்தும் திறவாத பாதிக் கதவாலே செய்வார் யாவாரமே -மெயின்
கடைகள் வெறிச்சோட இடையில் உள் ரோட்டில் விற்பார் விலை கூட்டியே
அதிகம் பொருள் வாங்கி பிரிஜ்ஜில் இடமின்றி அவித்தும் வைப்பாரடி -இங்கு
எதுவும் இல்லாதார் எங்கே செல்வார்கள்
இறைவன் காப்பானடி
ஐந்து நாளைக்கு அடங்கி இருக்கோனும்
அலுப்புக் கொள்வாரடி -பலர்
போணில் ரீலோடு போட்டு நிறைக்கின்றார்
பொழுது போக்கோணுமாம்
பொழுது போக்கோணுமாம்
தினமும் கூலிக்கு சென்று உழைப்போர்கள்
திகைத்துப் போனாரடி- பிள்ளை
இரைப்பை ரீலோடு கேட்கும் அதன் போது
ரப்பை நம்பி நிற்பார்.
அயலில் வசிப்போர்க்கும் அவதி நிலை கண்டு நல்லோர் கொடுப்பாரடி -சிலர்
அவுடி இருந்தாலும் அடுத்த வீட்டுக்கு
தவிடும் கொடுக்காரடி
தவிடும் கொடுக்காரடி
இறைவன் இருக்கின்றான் எல்லோர் மனதுக்கும் இதுவே அமைதி தரும்
நிறைய உள்ளோர்கள் நிலையை புரிந்திங்கு
கொடுத்தால் அருள்வான் இறை
0 comments :
Post a Comment