புரெவிப் புயல் காரணமாக வன்னி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு காதர் மஸ்தானின் வேண்டுகோளுக்கு இணங்க நிவாரண குழு விஜயம்.



நாட்டில் ஏற்பட்டுள்ள புரெவி புயல் மற்றும் பலத்த மழை காரணமாக நாட்டில் சீரற்ற நிலைமை தொடர்கின்றது.
இதனடிப்படையில் வன்னி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டு வாழ்விடங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. பலர் இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நிலையறிந்து மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய இடங்களில் பாதிப்புக்குள்ளாகி பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் வாழும் மக்களின் நிலைமையை அறிய அப்பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களின் பணிப்புரையின் கீழ் குழுவொன்று விஜயம் செய்துள்ளது.
இதன் பிரகாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் அவசியமான உடனடி தேவைகள் சம்பந்தமாகவும் அவர்களின் பாதுகாப்பையும் கருத்திற் கொண்டு உடனடி நிவாரண திட்டங்களை வழங்கவும் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவசர அறிவித்தலொன்றையும் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :