வீதியில் நின்ற நபரை வெட்டிய குழு சந்தேக நபர்களை தேடி வரும் பொலிஸ் குழு


பாறுக் ஷிஹான்-

வீ
தியில் நின்ற நபரை முன்விரோதம் காரணமாக வெட்டிய குழு சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் தேடி வருகின்றனர்.

கடந்த 2020.12.26 ஆம் திகதி அன்று மாலை 6 மணியளவில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனை பகுதியில் வீதியில் நின்ற 30 வயது நபர் ஒருவரை முன்விரோதம் காரணமாக மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த 10 பேர் அடங்கிய குழுவினர் வாள் மற்றும் ஆயுதங்களால் தாக்கி படுகாயமடையச்செய்து தப்பி சென்றுள்ளனர்.

இத்தாக்குதல் காரணமாக படுகாயமடைந்த நபர் உயிராபத்துடன் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இத்தாக்குதல் சம்பவத்தின் போது வாள்வெட்டு குழு உறுப்பினர் ஒருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன் போது அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரட்நாயக்கவின் கட்டளையின் படி சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி நௌபரின் வழிகாட்டலில் குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையில் விசேட குழு நியமிக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை (27) சம்மாந்துறை பதில் நீதிவான் முன்னால் ஆஜர்படுத்தப்பட்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.

மேலும் தப்பி சென்ற சந்தேக நபர்களினால் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் விசாரணைக்குழுவினர் மீட்டுள்ளதுடன் ஏனைய தப்பி சென்ற சந்தேக நபர்களை தேடும்பணி முடக்கிவிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :