ஹெரோயினை சூட்சுமமாக கடத்திய இளைஞனுக்கு 3 நாட்கள் தடுப்பு காவல் உத்தரவு



பாறுக் ஷிஹான்-
ஹெரோயினை சூட்சுமமாக கடத்திய இளைஞனை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரைபள்ளி வீதியில் சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் நடமாடிய 31 வயதுடைய இளைஞனை செவ்வாய்க்கிழமை(8) இரவு வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் சோதனை செய்தனர்.

இதன் போது குறித்த இளைஞனின் ஆடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 700 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டது

கைதான சந்தேக நபரை கல்முனை நீதிவான் நீதிமன்றில் இன்று (9) ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுப்பதற்காக 3 நாட்கள் தடுப்புகாவல் உத்தரவினை கல்முனை நீதிமன்ற நீதிவான் ஐ.என் றிஸ்வான் வழங்கினார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :