ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக வி.தவராஜா நியமனம்.

எஸ்.எம்.எம்.முர்ஷித்-

ட்டமாவடி பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக வி.தவராஜா இன்று திங்கட்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் கடமையாற்றிய திருமதி.நிஹாரா மௌஜீத் இடமாற்றம் பெற்று சென்ற நிலையில் அந்த வெற்றிடத்திற்கு உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் பதில் செயலாளராக கடமையாற்றிய நிலையில் புதிய பிரதேச செயலாளராக வி.தவராஜா இன்று திங்கட்கிழமை கடமைகளை பொறுப்பேற்றார்.

புதிய பிரதேச செயலாளரை வரவேற்கும் ஒன்றுகூடல் செயலக கேட்போர் கூடத்தில் உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர்;; தலைமையில் நடைபெற்றது.

இதில் செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், கணக்காளர் அஹமட் சஜ்ஜாத், செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் பதில் செயலாளராக கடமையாற்றிய ஏ.சி.அப்கர் அஹமட்; புதிய பிரதேச செயலாளரிடம் கடமைகளை ஒப்படைத்தார்.

புதிய பிரதேச செயலாளராக கடமையேற்றுள்ள வி.தவராஜா என்பவர் கிழக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளராக கடமையாற்றி வந்த நிலையில் இன்று திங்கட்கிழமை பிரதேச செயலாளராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :