J.f.காமிலா பேகம்-கம்பஹா மினுவங்கொட பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய பெண் பணியாற்றிய ஆடை தொழிற்சாலையில் 40க்கும் மேற்பட்டவர்கள் நோய்வாய் பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் பலரும் அண்மையில் சுகயீன விடுமுறை கோரியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
39 வயதுடைய கொரோனா தொற்றுக்கு இலக்காகிய பெண், அந்த தொழிற்சாலையில் ஊழியர்களின் செயற்திறனை கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு செய்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இப்பபெண்ணின் பிள்ளைகள் இருவரும் வெவ்வேறு பாடசாலைக்கு சென்றுள்ளதால், மினுவாங்கொடை வலயகல்விப்பணிப்பாளர் இப்பாடசாலைகளின் மாணவர்களை பரிசோதனைக்கு உற்படுத்த நடடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளதாக தெரிவித்தார்.
கம்பஹா வைத்தியசாலையில் , கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக கடமையாற்றிய ஊழியர்கள் 15 பேரும் தனிமைடுத்தப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment