சிறந்த ஆளுமையும் ஆற்றலும் உள்ள முஸாரப்புக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர் இந்த மக்களின் ஆணை அவரது எதிரகாலப் பணிக்கு உந்து சக்தியாக இருக்க வாழத்துகின்றேன் எனத் தெரிவித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப்புக்கு கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஷிபான் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்தாவது-அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 2015 களில் திகாமடுல்ல மாவட்டத்தில் தடம்பதித்து 2020ல் முஸ்ஸாரப் என்கின்ற இளம் ஆளுமையை பாராளுமன்ற உறுப்பினராக உருவாக்கியுள்ளது. பொத்துவில் மக்களுக்கு எட்டாக் கனியாக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் என்ற தாகம் திகாமடுல்லயில் மயிலுக்காக வாக்களித்த, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 43319 ஆதரவாளர்களின் வலிமையான உத்தரவாதத்தின் ஊடாக தீர்க்கப்பட்டிருக்கின்றது.
திகாமடுல்லயில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியில் ஈடுபட்டிருந்த பத்து பிரதான வேட்பாளர்களின் 19.839 விருப்பு வாக்குகளைப் பெற்ற முஷாரப் வெற்றி பெற்றுள்ளார் இந்த 2020 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வெற்றிக்காக வாக்களித்த திகாமடுல்ல மக்களுக்கும்,குறிப்பாக கல்முனைத் தொகுதியில் வாக்களித்த கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, நற்பிட்டிமுனை மக்களுக்கும் வாழ்த்துக்களும்,இதயம் கனிந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என அந்ந வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment