புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட வாழ்த்து செய்தியிலேயே முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
நாம் படைக்கப்பட்டதன் நோக்கம் இஸ்லாமிய அடிப்படையில் இஸ்லாத்தை வாழ வைப்பதற்காக வாழுதலாகும்.
அந்த வகையில் நம்மை மாற்று சமூகத்தவர்கள் எதிரியாக நோக்கினாலும் நாம் நற்பண்புகளோடு உறவாடுதலே நமது மார்க்கத்தை அவர்களிடம் கொண்டு செல்ல வழிவகுக்கும்.
இஸ்லாத்தின் வளர்ச்சி, பண்பாட்டின் வளர்ச்சியும் எடுத்துக் காட்டுகளுமே அன்றி வெறும் மார்க்க கடமைகள் மாத்திரம் அல்ல.
பல்லின சமூகத்தின் மத்தியில் நமது உயர் தரமான பண்புகளை வெளிப்படுத்துகிற போது புனித இஸ்லாத்தை இலகுவாக கொண்டு செல்ல முடியும்.
எனவே நமது நற்பண்புகளை வெளிபடுத்துவதனுடாக இனபேதம் கடந்து ஒற்றுமையாக பயணிக்க முயற்சிப்போமென தாழ்மையாக வேண்டுகிறேன்.
குறைந்தபட்சம் முஸ்லிம் சமூகத்தை அவர்களின் எதிரிகளாக, குற்றவாளிகளாக, நேர்மையற்றவர்களாக பார்ப்பதில் இருந்து விடுபடுவோம். பாமர அப்பாவி மாற்று மத மக்கள் மத்தியில் ஊடுருவியுள்ள இனவாத தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்போம்.
மயோன் முஸ்தபா
முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர்