வழமையைப்போன்று கல்முனை மாநகரசபையின் திண்மக் கழிவகற்றல் உழவு இயந்திர இழுவை பெட்டி, 2020.05.20 ஆம் திகதி சாய்ந்தமருது-10 தோணாவில் போடப்பட்டுள்ள தற்காலிக்க பாலத்தினூடாக பயனித்தவேளை பாலம் இடிந்து விழுந்ததன் காரணமாக குறித்த உழவு இயந்திர இழுவை பெட்டி குடைசைந்துள்ளது. இதில் பயணம் செய்த கல்முனை மாநகரசபை ஊழியர் தோணாவில் விழுந்து தெய்வாதினமாக ஊயிர் தப்பியுள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு விரைந்த கல்முனை மாநகரசபை அதிகாரிகள் உடனடியாக வாகனத்தை கரைசேர்த்தனர்.
2004 சுனாமி இடம்பெற்றதன் பின்னர் பல்வேறு தன்னார்வ நிறுவனங்கள் தங்களிடம் இருந்த பணத்தை சரியான திட்டமிடல் இல்லாமல் இவ்வாறான வேலைத்திட்டங்களை செய்ததன் பயனே இதுவாகும்.
சாய்ந்தமருது தோணாவின் இரு கரையிலும் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமையின் காரணமாக கடந்த காலங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
சாய்ந்தமருது தோணாவை நிர்வாகிப்பது யார் என்பது புதிராகவே உள்ளது.