எதிர்கட்சித் தலைவர் இல்லம் மீண்டும் சஜித்திற்கு: கோட்டாவின் வெகுமதி?


ஜே.எப்.காமிலாபேகம்-
க்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது பயன்படுத்திய இலக்கம் 30 என்கிற எதிர்கட்சித் தலைவரது அலுவலகம் தற்போது எதிர்கட்சித் தலைவருடைய இல்லமாக பெயர் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி அந்த இல்லம் தற்போது சஜித் பிரேமதாஸவுக்கே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் பல ஆண்டுகளாக எதிர்கட்சித் தலைவராக இருந்தவர்கள் இதனை எதிர்கட்சித் தலைவரது அலுவலகமாகப் பயன்படுத்திவந்தனர்.
இந்நிலையில், சஜித் பிரேமதாஸவுக்கு இந்த எதிர்கட்சித் தலைவரது இல்லம் என்று பெயர் மாற்றப்பட்ட இல்லத்தை வழங்குவதற்கான அமைச்சரவை யோசனை கடந்த 2ஆம் திகதி அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டு அங்கீகாரமும் பெறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -