திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவில் ஆலங்கேணி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இரவு படுக்கைக்குச் சென்று உறங்கியவர் இன்று காலை சடமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியா ஆலங்கேணி 02 பிரதான வீதியைச் சேர்ந்த செல்வராசா ததீஸ்வரன் (வயது 44),நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப் பட்டார்.
இவர் இரவு அதிகமாக மது அருத்திய நிலையில் குடும்பஸ்தர்களிடம் வாய்தர்க்கம் புரிந்து உறங்கச் சென்றதாகவும் தெரிவிக்கப் படுகிறது.
இவரது சடலம் மேலதிக பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.