கிண்ணியா ஆலங்கேணி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு


எம்.ஏ.முகமட்-
திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவில் ஆலங்கேணி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இரவு படுக்கைக்குச் சென்று உறங்கியவர் இன்று காலை சடமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியா ஆலங்கேணி 02 பிரதான வீதியைச் சேர்ந்த செல்வராசா ததீஸ்வரன் (வயது 44),நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப் பட்டார்.
இவர் இரவு அதிகமாக மது அருத்திய நிலையில் குடும்பஸ்தர்களிடம் வாய்தர்க்கம் புரிந்து உறங்கச் சென்றதாகவும் தெரிவிக்கப் படுகிறது.
இவரது சடலம் மேலதிக பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -