கொழும்பில் 20 பேர் அதிரடியாக கைது ..



ஜே.எப்.காமிலா பேகம்,ஏ.எஸ்.எம்.ஜாவித்-

கிரேண்ட்பாஸ் பொலிஸாரால் 20 பேர் கைது
இன்று காலை துறைமுகப்பகுதியில் உள்ள தமது வேலைத்தளத்திற்கு ஒரு சிறியரக பட்டா வேன் ஒன்றில் சென்ற கூலித் தொழிலாளர்கள் 20 பேரை கிரேண்ட்பாஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் பேலியகொடக்கு அண்மையில் உள்ள இங்குருகொட சந்தியில் வைத்தே வேனுடன் கைது செய்துள்ளனர்.

அரசாங்கமும் சுகாதாரத் தரப்பினரும் கொரோனா நோயைக் கட்டுப்படுத்த பல முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன் பொது மக்கள் அதன் தாக்கத்தில் இருந்து விடுபட சமுக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என கோரியுள்ள நிலையில் இவ்வாறு தொழிலாளர்கள் மிக நெருக்கமாக ஒரு சிறியரக வேனில் சென்றுள்ளமை பிழையான நடவடிக்கையெனக் கூறியே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -