1000 ரூபா சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால். கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற் சங்கங்கள் உடன் வெளியேற வேண்டும்;.


ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-

உலக சந்தையில் தேயிலையின் விலை அதிகரித்துள்ள வேளையில் கூட 1000 ரூபா சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால். கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற் சங்கங்கள் உடன் வெளியேற வேண்டும்;.
ஸ்ரீ ல ங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும் மஸ்கெலியா பிரதேசசபையின் சபையின் உபதவிசாளருமான பெரியசாமி பிரதீபன் தெரிவிப்பு.

லக சந்தையில் தேயிலையின் விலை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. பெருந்தோட்டதுறை வேலை செய்கின்ற தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் பல்வேறு தரப்பினரால் பல்வேறு கருத்து கடந்த காலங்களில் வெளியிடப்பட்டன.இதற்கு சான்றாக அவர்கள் கூறி வந்த விடயம் என்னவென்று சொன்னால் பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பினை வழங்க கமப்னிகள் முன்வரவில்லை. ஏனென்று சொன்னால் தற்போது சர்வதேச சந்தையில் தேயிலையின் விலை வீழ்ச்சி கண்டுள்ளது.கடந்த காலங்களில் கருத்துக்களை கூறி வந்தார்கள்.தற்போது கொரோனா தாக்கம் காரணமாக ஏனைய நாடுகளிலிருந்து தேயிலையினை கொண்டு வருவதில் சிக்கல் நிலை காணப்படுகின்றமையினால் வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு இலங்கை தேயிலைக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதுடன் தேயிலை விலையும் உயர்ந்துள்ளது.இந்த சூழ்நிலையில் ஏன் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வினை வழங்க முடியாது? என ஸ்ரீ ல ங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும் மஸ்கெலியா பிரதேசசபையின் சபையின் உபதவிசாளருமான பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார.
இன்று (17) திகதி ஹட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இந்த கூட்டு ஒப்பந்ததத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாக மக்களை அரசியல் லாபத்திற்காக ஆயிரம் ரூபா சம்பள உயர்வினை காட்டி கபட நாடகம் ஆடியதாக தான் காட்சியளிக்கின்றது.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்;சங்கங்கள் தோட்டத்தொழிலாளர்களிடமிருந்து சந்தா அறவிடுகின்றார்கள்.அவ்வாறு சந்தா அறவிடும் தொழிற்சங்கங்கள் இந்த ஆயிரம் ரூபாவினை வழங்க கம்பனிகளுக்கு அழுத்தத்தை பிரயோகித்தார்களா? என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.பெருந்தோட்ட மக்களிடம் சந்தா பெற்ற தொழிற்சங்கங்கள் பெருந்ததோட்ட மக்களின் பணத்தினை கொள்ளையிட்டு வேடிக்கையாக பல்வேறு கருத்துக்களை கடந்த காலங்களில் ஊடகங்களிலும் அரசியல் மேடைகளிலும் வீர வசனம் பேசிய எங்களது அரசியல் தலைவர்களுக்கு இப்போது சவால் விடுகின்றேன்.கடந்த காலங்களில் ஆயிரம் ரூபா சம்பள உயர்வினை பெற்றுத்தருவதாக தொழிலாளர்களை ஏமாற்றினீர்கள.; இப்போது ஆயிரம் ரூபா சம்பளம் பெற்றுக்கொடுக்க முடியும். அவ்வாறு முடியாவிட்டால் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்கள் வெளியேற வேண்டும். ஏனைய தொழிற்சங்கங்களுக்கு சந்தர்ப்பம் அளிக்க வேண்டும்.பாரம்பரிய முறையிலே கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற் சங்கங்கள் தான் சம்பள உயர்வு பேச வேண்டும். அவர்கள் கைச்சாத்திட வேண்டும் என்ற நிலைபாடு மாற வேண்டும். இந்த பெருந்தோட்ட மக்களை ஏமாற்றியது போதும்.புதிய அரசியல் யுகம் உருவக்கப்பட வேண்டும.;; மலையகத்திலே புதியதோர் மாற்றத்தினை உருவாக்க வேண்டும்.இந்த கூட்டு ஒப்பந்தத்திலே இருக்கின்ற ஏமாற்று வித்தைகள் எல்லாம் நீங்கி புதிய கூட்டு உடன்படிக்கை கைச்சாத்திடக்கூடிய கூட்டமைப்பை உருவாக்க முன்வந்தால் மாத்தரமே பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா உயர்வினை பெற்றுக்கொடுக்க முடியும்.இந்த சூழ்நிலையில் ஆயிரம் ரூபா சம்பள உயர்வினை நிச்சயம் பெற்றுக்கொள்ளலாம். ஏனென்றால் தேயிலையின் விலை உயர்ந்துள்ளது.மீண்டும் பொய் கூறாமல் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுக்க முயற்சியுங்கள். அவ்வாறு இல்லாவிட்டால் நீங்கள் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுங்கள் நாங்கள் தொழிற்சங்கங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து தொட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுத்தருகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -