மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம சேவை அதிகாரிகளும் இன்று பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

எஸ்.எம்.எம்.முர்ஷித்-

ட்டமாவடி பிரதேச செயலக பிரிவின் காகிதநகர் கிராம சேவை அதிகாரி கடந்த வெள்ளிக்கிழமை காகிதநகர் பிரதேசத்திற்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரமுகரால் தாக்கப்பட்டதை கண்டித்து மட்டக்களப்பு மாவட்டத்தில்   உள்ள அனைத்து கிராம சேவை அதிகாரிகளும் இன்று திங்கள் கிழமை மதியம் தொடக்கம் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை தாக்கப்பட்ட கிராம சேவை அதிகாரி தொடர்பில் தாக்கியவரை இதுவரை கைது செய்யப்படாத நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமசேவை அதிகாரிகளும் இன்று திங்கட்கிழமை நண்பகல்  முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கிராம அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை பாதிக்கப்பட்ட கிராம சேவை அதிகாரி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -