சட்டத்தை மதிப்போம்; நம்மை நாமே பாதுகாப்போம்; வீடுகளுக்குள் இருந்து முழு ஒத்துழைப்பை வழங்குவோம்; வேட்பாளர் றிஸ்லி முஸ்தபா அழைப்பு


ரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் இளைஞர்கள் அமைதியைப் பேணி வீடுகளுக்குள் இருந்து அரசின் சட்ட விதிமுறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பாதுகாப்பு தரப்பினருடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளாத வகையில் நடந்து கொள்ளுமாறும் பொதுஜன பெரமுனவின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் றிஸ்லி முஸ்தபா அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக விடுத்துள்ள விஷேட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சட்டத்தை மதித்து ஒழுக்கமுள்ள பிரஜைகளாக வாழ்வதற்கு இந்த சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் திடசங்கற்பம் பூணவேண்டும் அதேபோன்று ஏற்பட்டுள்ள வைரஸ் தாக்குதல் முழு உலகையும் அச்சுறுத்தி உள்ளது. அதே போன்று எமது நாட்டிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது எமது பிரதேசத்தில் இது வராமல் இருப்பதற்கு நாம் மிகவும் கவனமாக கையாள வேண்டிய சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கின்றோம். இன்று எமது நாட்டின் சுகாதாரத்துறை ஊழியர்கள், வைத்தியர்கள் அதேபோன்று முப்படையினரும் எமது நாட்டை பாதுகாக்கின்ற விடயத்தில் முழுமையாக தங்களை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்தியுள்ளனர், இந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டியது எங்களுடைய தார்மீக கடமையாகும்.
நேற்றைய தினம் பொலிசாரின் ரோந்து நடவடிக்கையின்போது சாய்ந்தமருது கல்முனை பிரதேசங்களில் தகுந்த காரணங்கள் இன்றி அவசியம் இல்லாமல் வெளியே சுற்றி திரிந்த பல இளைஞர்கள் கைதாகி இருப்பதாக அறிய முடிகின்றது. எனவே இவ்வாறான நெருக்கடி நிறைந்த காலகட்டத்தில் பொறுப்புகளை உணர்ந்து மிகவும் அவதானமாக நடந்து கொள்ளுமாறும் அதேபோன்று வெளி ஊர்களுக்கு அவசியம் கருதி செல்பவர்கள் தங்களை உரிய முறைப்படி பதிவு செய்து கொண்டு சுகாதார சட்ட கட்டுப்பாடுகளுடன் நடந்து கொள்ளுமாறும் அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -