கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் கைது


க.கிஷாந்தன்-
துளை, கந்தேகெதர பகுதியில் நீண்டகாலமாக இயங்கி வந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றினை பதுளை கலால் திணைக்கள அதிகாரிகள் சுற்றி வளைப்பு ஒன்றினை மேற்கொண்டு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்துள்ளதாக கலால் திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.

குறித்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் பதுளை, கந்தேகெதர எனும் பகுதியில் நீண்டகாலமாக இயங்கி வருவதாக கிடைத்த இரகசிய தகவலினையடுத்து விரைந்த கலால் திணக்கள அதிகாரிகள் 15.04.2020 அன்று நிலையத்தினை சுற்றிவளைத்த போது அங்கு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த குடும்பஸ்த்தர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்து 330 லீற்றர் கோடா, மற்றும் ஸ்பீரிட் கசிப்பு உட்பட கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஆகியன கலால் திணைக்கள அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவரையும், மற்றும் மீட்கப்பட்ட பொருட்கள் ஆகியனவற்றையும் பதுளை நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -