ஊரடங்கை தளர்த்தும் அதிகாரம் எனக்கே உண்டு - அமெரிக்க அதிபர் டிரம்ப்


அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ள நிலையில், இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் வணிக நிறுவனங்கள் திறக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

உலகளவில் கொரோனா பாதிப்பு, அமெரிக்காவிலேயே உச்சத்தை தொட்டுள்ளது. இதுவரை 23 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப், ஊரடங்கை தளர்த்தி, வணிக நிறுவனங்களை திறக்கும் அதிகாரம் எந்த மாகாண ஆளுநர்களுக்கும் கிடையாது எனவும், அந்த அதிகாரம் தனக்கே உரியது எனவும் அதிரடியாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், நியூயார்க், லூசியானா, மிச்சிகன் போன்ற பகுதிகளிலேயே கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதாகவும், மற்ற மாகாணங்களில் பெரும் பாதிப்பு இல்லை எனவும் குறிப்பிட்டார். இன்னும் சில தினங்களில் கொரோனா பாதிப்பு இல்லாத மாகாணங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு கடைகள் திறக்கப்படும் என்றும், ஆனால் எந்தெந்த மாகாணங்கள் என்பதை தற்போது கூறமாட்டேன் எனவும் டிரம்ப் குறிப்பிட்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -