சௌபாக்யா" சுபட்சம்" பத்து இலட்சம் வீட்டுத்தோட்டங்களை அபிவிருத்தி செய்யும் துரித தேசிய வேலைத்திட்டம் 2020 திருகோணமலையிலும் முன்னெடுப்பு.

எப்.முபாரக்-
திருகோணமலை முள்ளிப் பொத்தானை கமநல சேவை நிலையத்திற்கு உட்பட்ட மகளிர் கமக்கார அமைப்பில் அங்கத்துவம் பெற்றுள்ள 50 பெண் விவசாயிகளுக்கு மூன்று வகை நாற்று மரக் கன்று வழங்கும் நிகழ்வு இன்று (07) வெகு விமரிசையாக நடை பெற்றது.

இதன் போது கத்தரி, கரி கொச்சி, மிளகாய் சாடிகள் என்பன இன்று முள்ளிப்பொத்தானை 228/B விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இதனால் சாலிய அருன , சதாம்நகர் பெண்கள் விவசாய சங்க அங்கத்தவர்களிடம் கமநல சேவை நிலைய முகாமைத்துவ உதவியாளருமான பிரிவுக்கான பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தருமான எம் எஸ் அப்துல் ஹலீம் அவர்களினால் 50 பயன் பெரும் பெண்கள் விவசாய சங்க அங்கத்தவர்களிடம்
ஒப்படைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -