டெவோன் வனப்பகுதியில் பாரிய தீப்பரவல் - நீர்வீழ்ச்சியின் ரம்மியமான காட்சியை காணமுடியாத நிலை

க.கிஷாந்தன்-

திம்புள்ள – பத்தனை டெவோன் வனப்பகுதியில் இன்று (24.03.2020) மாலை ஏற்பட்ட பாரிய தீப்பரவல் காரணமாக 5 ஏக்கர் தீக்கிரையாகியுள்ளது.

குறித்த வனப்பகுதியில் தீ வேகமாக பரவி வருவதால் மேலும் பல ஏக்கர் எரிந்து நாசமாகலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்டுள்ள வனத்தின் மேல்பகுதியிலேயே டெவோன் நீர் வீழ்ச்சி அமைந்துள்ளது.
அத்துடன், கடும் வறட்சியும் நிலவி வருவதால் நீர்வீழ்ச்சியின் ரம்மியமான காட்சியை காணமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உஷ்ணமான காலநிலையால் இத்தீ ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், மனித செயற்பாடு உள்ளதா என்ற கோணத்தில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

பொலிஸாரும், பத்தனை பிரதேச மக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -