கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வெறிச்சோடிக் காணப்படும் திருகோணமலை நகரம்


எப்.முபாரக்-

திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக திருகோணமலை நகரம் இன்றைய தினம்(16) வெறிச்சோடிக் காணப்பட்டது.
நகரில் மக்களின் நடமாட்டம் சம்பூரணமாக குறைந்து காணப்பட்டதோடு நகரிலுள்ள காலி கோவில்,முஸ்லிம் பள்ளிவாயல்கள்,கிறிஸ்தவ மற்றும் பௌத்த விகாரைகளும் மூடிய வண்ணம் காணப்பட்டது.

வழமையாக கிழமை நாட்களில் திருகோணமலை நகரம் மக்கள் சனத்தினால் நிறைந்து காணப்படும்.

ஆனால் இன்றைய தினம் வழமைக்கு மாறாக காணப்பட்டது.
திருகோணமலை பேருந்து நிலையம், தொடருந்து நிலையம் ஆகியவற்றில் இன்று விரல்விட்டு எண்ணக்கூடிய அளவே ஆள் நடமாட்டம் இருந்ததை காணமுடிந்தது.

பிரதான வீதிகளிலும் ஆள் நடமாட்டம் இருக்கவில்லை என்பதுடன் ஆடை விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.
நகரில் அனேகமான கடைகள் மூடப்பட்டுள்ளதை அவதானிக்ககூடியதாக இருந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -