நுவரெலியாவில் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயங்களில் ஒன்றான இராகலை நகர் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானம் மஹா கும்பாபிசேக பெருவிழா உலங்கு வானுர்திகள் மலர் தூவ, மேள தாள இசை முழங்கள் நடன நாட்டியங்கள் அரகோர கோசம் எழு, வேத பாராயணங்கள் ஓதி மஹா கும்பாபிசேகம் நேற்று (07) ம் திகதி சிறப்பாக நடைபெற்றன.
விநாயகர் வழிபாடு, யாக பூஜை, கும்ப பூஜை, ஸ்தூபிஅபிஷேகம,; நடைப்பெற்று காலை 7-30 மணிக்கு இராகலை நடுக்கணக்கு கருணா கங்கையிலிருந்து புனித கங்கை நீருடன் யானையின் பவனியில் தமிழ் சிங்கள கலைகலாசார பாரம்பரிய நிகழ்வுகளுடன் பக்த அடியார்கள் புடைசூழ தீர்த்த ஊர்வலம் ஆரம்பமாகி நகரத்தின் ஊடாக . தீர்த்த ஊர்வலம் முருகன் ஆலயத்தினை வந்டைந்த பின் அதனை தொடர்ந்து பிரதான கும்பம் ஆலயததினை வலம் வந்து மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றன.
கும்பாபிசேகத்தினை தொடர்ந்து பகல் மகேஸ்வர பூஜையை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுடன். மாலை 5 மணிக்கு விசேட வசந்த மண்டப பூஜை நடைபெற்று சுவாமி உள்வீதி ஊர்வலம் இடம்பெற்றன.
இந்த கும்பாபிசேக பெருவிழா கடந்த 01 ம் திகதி ஆரம்பானது அன்று புண்ணியாக வாசனம்,கிராமசாந்தி,நவகிரக ஹோமம்.ஆகியன இடம்பெற்றன.
அதனை தொடர்ந்து கடந்த 05 ம் திகதி எண்ணெய் காப்பு நிகழ்வு விசேட யாக பூஜை பாவனாபிஷேகம் நடைபெற்று மாலை 5 மணிக்கு விசேட ஹோமம் யாக தீபாரதனை வேதஸ் தோத்திர பாராயணம் நடைபெற்று, அன்று காலை 8 மணி முதல் பக்தர்களின் எண்ணெய் காப்பு ஆரம்பமாயின.அதனை தொடர்ந்தே இந்த கும்பாபிசேகம் நடைபெற்றன.
இந்த கும்பாபிசேக பெருவிழாவில்; பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சுமார் 20,000 இற்கும் மேற்பட்ட பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.
பக்தர்களின் பாதுகாப்பு கருதி ராகலை பொலிஸார் விசேட பாதுகாப்பு ஒழுங்குகளையும் செய்திருந்தனர்.
இக்கும்பாபிசேக சமய கிரிகைகளை இலங்கையின் பிரசித்தி பெற்ற சிவாச்சாரியார்கள்,குருக்கள் குரு முதல்வர்கள் ஆகியவர்கள் நடாத்தி வைத்தனர்.