நாட்டை அழகு படுத்தும் வேலைத்திட்டத்தில் ஒன்றான வெற்றுச் சுவர்களை அழங்கரிக்கும் வேலைத்திட்டங்கள் நாடு பூராகவும் இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில் வாழைச்சேனை ஹைராத் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் வாழைச்சேனையில் வரையப்பட்ட சுவரோவியம் நிறைவுக்கு வந்து மக்கள் பார்வைக்காக நேற்று (9) திறந்து வைக்கப்பட்டது.
இரவு, பகலாக குறித்த சுவரோவியத்தை அழகான முறையில் வரைந்த வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மாணவர்களான எம்.ஜே.எம்.ஜுமைல், ஏ.எஸ்.ஹஸ்ஸன் மற்றும் அதன் செயற்பாட்டாளர்களுக்கு ஹைராத் இளைஞர்கழக நிர்வாகத்தினரும் பிரதேச பொதுமக்களும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.