திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வருகின்ற அடை மழை காரணமாக திருகோணமலை கரையோரங்களின் கடலலைகளின் தாக்கம் அதிகரிப்பு


எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வருகின்ற அடை மழை காரணமாக திருகோணமலை கரையோரங்களின் கடலலைகளின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது.
இம்மாவட்டத்தின் திருகோணமலை, மூதூர்,கிண்ணியா மற்றும் நிலாவெளி, குச்சவெளி மற்றும் புல்மோட்டை போன்ற பகுதிகளில் கடலலைகளின் தாக்கம் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்வதில் அவதானமாக இருக்குமாறு திருகோணமலை கடற்றொழில் அலுவலகம் மீனவர்களை அறிவுறுத்தியுள்ளது.
மீனவர்கள் இன்று(26) யாரும் கடற்றொழிலுக்கு செல்லாது இருந்ததோடு படகுகள் கடையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதனால் கடற்கரையோரங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்தின் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியான அடை மழை காரணமாக தாழ் நிலப்பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -