பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவேன் – மஹிந்த உறுதி


லங்கையில் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாக இலங்கையின் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நிதியமைச்சராக இன்று (திங்கட்கிழமை) அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட அவர், அங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையின் பொருளாதாரம், அரச- தனியார் துறை என அனைத்தும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனால், மக்கள் நாட்டின் பொருளாதாரத்தின் மீது நம்பிக்கை அற்றவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள தயங்குகிறார்கள். வியாபாரங்கள் அனைத்தும் வீழ்ச்சியடைந்துள்ளன.

வங்கிக் கடன் அதிகரித்துள்ளது. இதனால். இலங்கை இன்று வீழ்ச்சியடைந்துள்ளது. இதிலிருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது.
வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவில் கைது செய்யப்படலாம் என அரச அதிகாரிகள் அச்சத்துடன்தான் இதுவரைக் காலமும் இருந்து வந்தார்கள்.

நாம் எதிர்காலத்தில் அரச அதிகாரிகளின் இந்த அச்சத்தை நீக்க நடவடிக்கை எடுப்போம் என்பதை இவ்வேளையில் கூறிக்கொள்கிறோம்” என மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -