எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் பிரதமரை நியமிக்குமாறு அவசரக் கடிதம்


பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில், அவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் சபாநாயகர் கருஜயசூரியவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த கடிதத்திலேயே அவர், ரணில் விக்ரமசிங்கவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
தான் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாகவும் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதிக்கு அறிவிக்கவுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க நேற்று ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை வௌியிட்டு குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துவிட்டு அலரி மாளிகையில் இருந்து விடைப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -