தென்கிழக்கு பல்கலையில் விஞ்ஞான ஆய்வரங்கு 2019

எம்.வை. அமீர் –
லங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் 8 வது வருடாந்த விஞ்ஞான ஆய்வரங்கு பிரயோக விஞ்ஞான பீட கேட்போர் கூடத்தில் 2019-11-07 ஆம் திகதி இடம்பெற்றது.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் அவர்கள் பிரதம அதிதிதியாக கலந்துகொண்ட இவ் விஞ்ஞான ஆய்வரங்குக்கு சிறப்புப் பேச்சாளராக பேராதனை பல்கலைக்கழக விஞ்ஞான பீட பேராசிரியர் எம்.ஏ.கரீம் அவர்கள் கலந்து சிறப்புரையாற்றினார்.

விஞ்ஞான ஆய்வரங்கின் இணைப்பாளர் எம்.ஏ.ஏ.எம்.பஹம் அவர்களின் வழிநடத்தலின் கீழ் பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல்.செய்னுடீன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 30 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டது.
நிகழ்வின் இறுதியில் செயலாளர் TBNS மடுகல்ல நன்றியுரை நிகழ்த்திய அதேவேளை பிரதம அதிதிக்கும் விஷேட பேச்சாளருக்கும் நிகழ்வு மலரும் விஷேட பேச்சாளருக்கு ஞாபக சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது



















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -