ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள், (09) நிறைவடைந்துள்ள நிலையில், குறித்த காலப்பகுதிக்குள் 98 வீதமான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இதுவரை தமது வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள், பிரதேசத்திற்குப் பொறுப்பான தபால் அலுவலகத்தில் அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விநியோகிக்கப்படாத உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை தபால் அலுவலகங்களில் வைக்கப்படும் எனவும் தபால்மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த ஏனைய தினங்களில், தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி, வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளமுடியும் என தபால்மா அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.