தோப்பூர் சின்னக் கலுவான் பாலத்தின் கீழிருந்து வெடிபொருள்கள் சில மீட்பு.



எப்.முபாரக்-
திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் சின்னக் கலுவான் பாலத்தின் கீழிருந்து இன்று (27) பிற்பகல் 1.30 மணியளவில் வெடிபொருள்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பாலத்தின் கீழ் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் மேற்படி வெடிபொருள்களைக் கண்டு அரச புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கிய இரகசியத் தகவலின் அடிப்படையில் மூதூர் பொலிஸாரால் மேற்படி வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது 02 கைக் குண்டுகள் ,ரி56 ரகத் துப்பாக்கி ரவைகள் 15 என்பன மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த வெடிபொருள்கள் நீதிமன்றத்தின் அனுமதியுடன் விசேட அதிரடிப்படையின் உதவியுடன் செயலிழக்கச் செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -