ஆய்வுக் குழுவின் நடவடிக்கைகளை பார்வையிட ஊடகங்களுக்கு அனுமதி : சபாநாயகர்

ரச பொது நிருவனங்கள் தொடர்பான பாராளுமன்ற ஆய்வுக் குழுவின் நடவடிக்கைகளை (கோப் குழு ) பார்வையிடுவதற்கு ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாளை முதல் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம் இன்று சபாநாயகர் அறிவிப்பு நேரத்தின் போது இது தொடர்பாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவிப்பொன்றை விடுத்தார். இதன்போது அவர் குறிப்பிடுகையில்,

அரச பொது நிருவனங்கள் தொடர்பான பாராளுமன்ற ஆய்வு குழு அறையில் பொறுத்தப்பட்டுள்ள ஒளிபரப்பு தன்மையுடன் கூடிய கமரா கட்டமைப்பை ஒப்படைக்கும் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 2.30 வரையில் நடத்தப்படவுள்ளது.

இதில் கலந்துக்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிப்பு விடுக்கின்றேன். இதேவேளை

இதன் பின்னர் அரச பொது நிருவனங்கள் தொடர்பான குழுவின் நடவடிக்கைகள் ஊடகங்களுக்காக திறந்து விடப்படும்.

இந்த விடயத்தில் ஊடகங்கள் பொறுப்பு தன்மையுடன் நடந்துக்கொள்ளுமென நான் நம்புகின்றேன். பாராளுமன்றத்தின் செயற்பாடுகளின் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.வீரகேசரி

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -