அமெரிக்க ஜனாத்திபதி டொனால்ட் ட்ரம்ப் முன்பு ஈரானுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார், ஆனால் பொருளாதாரத் தடைகள் இருக்கும்போது பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என்று தெஹ்ரான் கூறியுள்ளது.
தெஹ்ரானுக்கும் மேற்கத்திய சக்திகளுக்கும் இடையிலான பதட்டங்கள் மத்தியில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் கடந்த திங்களன்று இந்த கருத்துக்களை தெரிவித்தார். ஈரானின் உளவுத்துறை அமைச்சகம் திங்களன்று 17 அமெரிக்க உளவாளிகளைக் கைப்பற்றி சிலருக்கு மரண தண்டனை விதித்ததாகக் கூறியது, ஆனால் டிரம்ப் அந்த அறிக்கைகளையும் மறுத்துள்ளார்.
மேலும், கூட்டு விரிவான செயல் திட்டம் என்று முறையாக அறியப்பட்ட ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து டிரம்ப் அமெரிக்காவை விலக்கிக் கொண்டதோடு, அந்நாட்டிற்கு மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்ததில் இருந்து கடந்த ஆண்டு முதல் பதற்றம் அதிகரிக்க தொடங்கியது. குறித்த ஒப்பந்தம் போதுமான அளவு முன்னேற்றம் அடையவில்லை என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
ஆனால் மறுபக்கத்திலே, அப்போதிருந்து, அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் பிற பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பாக ஈரானிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை கதவுகள் திறந்திருப்பதாக டரம்ப் பகிரங்கமாக கூறியிருந்தார். ஆனால் பொருளாதாரத் தடைகள் நடைமுறையில் இருக்கும்போது பேச்சுவார்த்தைகளுக்கு அவை சிறந்ததாக அமையாது என தெஹ்ரான் கூறியுள்ளது.
இந்த நிலையில் ஈரானிய அரசு தொலைக்காட்சியில் படங்களை வெளியிட்ட பின்னர் ட்ரம்பின் கருத்துக்கள் சந்தேகத்திற்குரிய உளவாளிகளுடன் தொடர்பு கொண்டிருந்த சிஐஏ அதிகாரிகளைக் சுட்டிக்காட்டியது. 17 உளவாளிகள் 2019 மார்ச் முதல் 12 மாதங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக புலனாய்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றொரு அறிக்கை தெரிவிக்கிறது.
இத்தகைய அறிவிப்புகள் ஈரானில் வழக்கமானவை, அவை பெரும்பாலும் உள்நாட்டு மக்களை திருப்தி படுத்துவதற்காக செய்யப்படுகின்றன. ஆனால் வளைகுடா நெருக்கடி அதிகரிக்கும் போது ஈரானிய நிலைப்பாட்டை கடுமையாக பார்க்க வேண்டி வரும். ஈரான் வெளியிட்டுள்ள குறித்த செய்தியானது"முற்றிலும் தவறானது குறிப்பிட்ட ட்ரம், அதில் இருக்கின்ற உண்மைத்தன்மை பூஜ்ஜியமாக இருப்பதாகக் கூறியுள்ளார். Thank you al- jazirah
